கிரகங்கள் பேசுகின்றன
🔘 சூரியன் எனும் நான்
வாயுப்பொருட்களால் ஆன ஒரு நெருப்புக் கோளம் ஆவேன்..
🔘 நான் உங்களது பூமியின் விட்டத்தைப் போல் சுமார் 10 மடங்கு அதிகம் ஆவேன்..
🔘 என்னை மையமாக வைத்து அனைத்து கிரகங்களும் சுற்றி வருவதால் என்னை கிரகங்களின் தலைவன் என அழைக்கிறார்கள் ஜோதிட சான்றோர்கள்.
🔘 எனவே எல்லாவற்றிலும் முதன்மையானவர்களை என்னையே குறிக்கும்.
🔘 ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர். தந்தையைச் சார்ந்தே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இருப்பார்கள்.
🔘 எனவே குடும்ப உறவில் தந்தையையும், தந்தை வர்க்கத்தினரையும் என்னையே குறிக்கும்.
🔘அதே போல் உங்களை ஆளும் அனைத்து நபர்களையும் என்னையே குறிக்கும். அதாவது நாட்டுத் தலைவர்கள், கட்சித்தலைவர்கள், பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்துத் தரும் மேலதிகாரிகள் போன்றவர்களை சூரியன் குறிக்கும்.
🔘 எனவே தலைமை தாங்குதல், மனோதிடம், நேர்மை, ஆளுமைதிறன், நிர்வாக திறன், ஒருவருடைய தனித்தன்மை, உத்யோகம், அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுய கௌரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் போன்றவற்றுக்கு நானே காரகமாகும்.
🔘 கிரகங்களில் நான் மட்டுமே சுய ஒளியை கொண்டுள்ளேன்.
என்னிடம் இருந்துதான் மற்ற கிரகங்களுக்கு ஒளி செல்கின்றது. என் ஒளியைத் தான் மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. எனவே நம் உடலில் கண்களுக்கும், கண் பார்வைக்கும் காரகன் நானே ஆவேன்.
எனவே உடலில் முக்கிய உறுப்புகளுக்கு காரகன் நானே ஆவேன்.
🔘 அதாவது தலை, மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு காரகன் நானே .
அடுத்து உடலில் உள்ள முக்கிய உறுப்பு உடலில் உள்ள எழும்புகள் ஆகும். எனவே எலும்புகளுக்கு காரகனும் நான் தான். உடலில் உள்ள உஷ்ணத்திர்க்கும் நானே காரகன் ஆகும்.
🔘 உடலில் உள்ள உஷ்ணத்தின் மாற்றங்களினால் (ஏற்ற,இறக்கங்கள்) தான் நோய்கள் (காய்ச்சல்,ஜலதோஷம்) அதிகளவு வருகின்றன. எனவே நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களையும், மருந்துப்பொருட்களும் நானே காரகங்கள் ஆவேன்
🔘ஒரு ஜாதகத்தில் பலனை நிர்ணயிப்பதில் லக்னமே பிரதானமானது. சூரியனின் நிலையினை (சூரிய உதயம்) கருத்தில் கொண்டே லக்னம் கணிக்கப்படுகின்றது. லக்னபாவத்தையும் மற்ற 11 பாவங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு அளிக்கிறேன்.
🔘அதாவது ஒருவரின் விதியை நிர்ணயிப்பது சூரியனே ஆகும். அதன்படி ஒவ்வொரு பாவத்தின் கொடுப்பினையை (லக்ன புள்ளியை நிர்ணயிப்பத்தின் மூலமாக) எனது நிர்ணயிப்பதினாலும் கிரகத்திற்கு வேலையை பிரித்துத் தர என்னுடைய அதிகாரம் பெறுவதாலும் நான் நவக்கிரகங்களில் கதாநாயக அந்தஸ்தை பெறுகிறேன்.
🔘பகற்பொழுது, மாலை, பாறை, காடு, சிங்கம், கோதுமை, தாமிரம், செந்தாமரை, சுவைகளில் காரம், சிவப்பு, நிறம், மாணிக்கம், சிவபெருமான், கிழக்கு திசை போன்றவை எனது காரகங்களாகும்.
🔘 பெரும்பாலான ஜோதிட நூல்களில் என்னை அசுப கிரகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக என்னுடைய காரகங்களை சற்று உற்று நோக்கினால் அதில் சுப தன்மைகளே அதிகம் என்பதால் என்னை 75% சுபமாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்.
சந்திரன் பேசுகிறேன்
🔘 சந்திரன் எனும் நான் பூமியை மையமாகக் கொண்டு பூமியை சுற்றி வருகிறேன்.
🔘 நான் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளனோ, அந்த ராசியை தான் ஜென்மராசி என்று கூறுவார்கள்
🔘 நான் எந்த நட்சத்திரத்தில் உள்ளனோ அதுதான் ஜென்மநட்சத்திரம் என்பார்கள்.
🔘 என்னை வைத்துதான் தசா-புத்திகள் கணக்கீடு செய்கின்றார்கள்
🔘 சூரியனுக்கு அடுத்த படியாக நட்சத்திர அந்தஸ்தினைப் பெரும் கிரகம் நானே ஆவேன்.
🔘 சூரியன் உயிருக்கு காரகர் என்றால் ,நான் அந்த உயிரை வைத்திருக்கும் உடலுக்கு காரகர் ஆவேன்.
🔘கிரகங்களிலேயே ராசிமண்டலத்தை மிக வேகமாக சுற்றிவரும் கிரகம் நானே ஆவேன். எனவே விரைவான செயல்களுக்கு நானே காரகன் ஆவேன்.
🔘 நான் உடலுக்கு காரகன் என்பதால் எல்லா உணவு பொருட்களுக்கும் (சமைத்த உணவுகள், காய்கறிகள்) நானே காரகன் ஆவார்.
🔘 சிந்தனைகளுக்கு நானே காரகன் ஆவேன். எனவே எனக்கு மனோ காரகர் என்றும் பெயர்.
🔘 உறவு முறைகளில் என்னை,தாயையும், தாய் வர்க்கத்தையும், தாயை போன்று வயதில் மூத்த பெண்களான மாமியார், அத்தை,அண்ணி, மூத்த சகோதரி ஆகியோரையும் குறிக்கும் காரகர் ஆவேன்
🔘 நான் நீர் கிரகம் என்பதாலும் வெண்மை நிறத்திற்கு காரகர் என்பதாலும் உணவுப் பொருட்களில் பால், தயிர், அரிசியைக் குறிக்கும்.
மற்றும் சந்திரன் உடலில் உள்ள நீர் தன்மையான இரத்தத்திற்கும் காரகர் ஆவேன்
🔘 மேலும் அமைதியான தோற்றம், மனக்குழப்பங்கள், மன பேதலிப்பு, பைத்தியம், குளிர்ச்சி, சளி, சிலேத்தம, சீதள நோய்கள்,
இரத்த அழுத்த நோய்களுக்கும் நானே காரகம் ஆவேன் ,
🔘 முத்து, அலுமினியம், ஈயம், நீர்வாழ் உயிரினங்கள், சுறுசுறுப்பு, வெண்பட்டு, வெண்குடை, இரவுப்பொழுது, உணவு விடுதிகள், தெய்வங்களில் பார்வதி அம்சம் போன்றவைகளுக்கு நானே காரகர் ஆவேன்
செவ்வாய் பேசுகிறேன்
🔘 ஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று என்னை அழைப்பார்கள்
🔘 முழுவதும் கட்டி முடிக்கப்படாத காலி நிலம், அசையா சொத்துக்கள், போன்றவற்றுக்கு நானே காரகன் ஆவேன்.
🔘 பாரதத்தில் கூட நிலத்தின் மூலமான சண்டை – சச்சரவுகள், போர் என வந்தது,அதற்கு காரணமே நான் தான்.
🔘 பாரதபாபோரில் பயன்படுத்தப்படும் தர்மனின் ஈட்டி, நகுலனின் வேல், அர்ஜுனனின் அம்பு ,பீமனின் கதாயுதம் போன்ற கூர்மையான ஆயுதங்கள், இரானுவத்தில் உள்ள துப்பாக்கி போன்றவைகளுக்கு நானே காரகன்..
🔘 போரினால் ஏற்படும் காயங்கள், வலி, வேதனை, அடக்கு முறைகள், விபத்து போன்றவற்றுக்கும் நானே காரகமாவேன் .
🔘 நாட்டை பாதுகாக்கும் காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை போன்ற சீருடை அணிந்த உடல் வலிமை, மனவலிமை உள்ளவர்கள் பணியாற்றும் துறைகளுக்கும், அதில் உள்ளவர்களுக்கும் நானே காரகம் ஆவேன்..
🔘 வீரத்தை விரும்பும் எல்லா பெண்களுக்கும் களத்திர காரகரானாக இருப்பேன்
🔘 நான் பொதுவாக தைரியம், முன்கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம், மற்றவருக்கு கட்டுப்படாமை, புரட்சி செய்தல், உடல் வலிமையை பயன்படுத்துதல், ரண வேதனையை உண்டாக்குதல் போன்றவற்றுக்கு நானே காரணமாக இருக்கிறேன்.
🔘 நான் வலு குறையும் போது மன உளைச்சல், அமைதியின்மை, பதற்றம் போன்றவற்றுக்கும் நானே காரகன் ஆகிறேன்..
🔘 நான் கெடும் போது கடன், வழக்கு, சண்டை, சச்சரவுகள், துரோகம், மற்றவர்களால் மிரட்டப்படுதல் (Black Mail) , ஆயுதங்கள் வைத்திருத்தல், தீவிரவாதம், ஊழல் போன்றவற்றுக்கும் காரகமாகி விடுகிறேன்.
🔘 இயந்திரங்கள், பெரிய தொழிற்சாலைகள், கருவிகள், கட்டுமான தொழில்கள், கனரக வாகனங்கள், ஆபத்தான கொடிய விலங்குகள், முட்செடிகள், புதர்கள், கரடு முரடான பாதைகள், செம்பு, பவளம், உணவு பொருட்களில் காரம் (மிளகாய் போன்றவை), தெய்வங்களில் முருகன் போன்றவற்றுக்கும் நானே காரகமாகிறேன்..
புதன் பேசிகிறேன்
🔘 எறும்புகள் போல சுறுசுறுப்புக்கும், மின்சாரம் போல விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் நானே காரகன் ஆவேன்.
🔘 என்னுடைய ஆதிக்கம் கொண்டவர்கள் புத்தி கூர்மை உடையவர்கள்,
சமயோஜித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் விரைவாக முடிப்பார்கள்.
🔘 கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களை விட விரைவில் நான் சுற்றி விடுவதால், என்னை புத்திகாரகர் என்று அழைக்கிறார்கள் பெரியவர்கள்..
🔘 இரண்டு தரப்பு சண்டை இட்டுக்கொண்டால் சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் என்னை தான் அழைப்பார்கள் .
🔘 காதலிக்கு கவிதை எழுதுவது, மாணவர்களுக்கு கணிதத்தை தருவது , ஆய்வாளர்களுக்கு புள்ளி விபரம் தருவது , அழகிய சிற்பங்களையை காவியமாக என எல்லாமே நான் தான்..
🔘 நான் வேகமாக ஓடுவதால் எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, பத்திரிக்கை, கம்ப்யூட்டர், நூல்கள், போக்குவரத்து போன்றவற்றை என் முதுகிலே ஏற்றி விடுகிறார்கள்...
🔘 உங்களை இயங்க வைக்கும் நரம்பு மண்டலங்களுக்கும், உணர்வு புலன்களுக்கும் நானே காரகன் ஆவேன்.
🔘 நான் சமாதானம் செய்வதில் வல்லவன்,
🔘 அறிவு பூர்வமான நுட்பமான பொது அறிவு, மாதம் மாதம் செலுத்தும் தவணை முறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்தம், நிபுணத்துவம், இளவரசன்,
என எல்லாமே நான் தான்...
🔘 ரஜினி ,விஜயகாந்த் ,
வைரமுத்து என பல குரலில் பேசும் திறன் பெற்றவன் நான்..
🔘 நீங்கள் எப்படி பேசினாலும் என்னால் பதில் தர முடியும்.. ஆதலால் நான் விகடகவி,
🔘 என்னை பச்சை நிறம் என சொல்லுவார்கள்
, ஒரு முறைக்கு இரு முறை செய்யும் இரட்டைத் தன்மை, பிரதிநிதிகள் (Agent) நுட்பமான ஆராய்ச்சி, சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகள் என அனைத்தும் நானே...
🔘 வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, இலக்கணப் புலமை, உலோகங்களில் பித்தளை போன்றவற்றுக்கும் நானே காரகன்.
குரு பேசிகிறேன்...
🔘 சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் நான் தான்.
🔘 ஆதலால் பெரிய மனிதத் தன்மைக்கு காரகர் ஆவேன்.
🔘 தெய்வத்திற்கு இணையான குணங்களான சாந்தம், பண்பாடு, நீதி, நேர்மை, தர்ம சிந்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறருக்கு நல்ல ஆலோசனையைத் தருவது, மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை போன்றவற்றிக்கு நானே காரகமாவேன்.
🔘 இறைவனை சுட்டிக்காட்ட நான் தேவை ,உங்களுக்கு வழிகாட்டும் ஜோதிட நல்லாசிரியர் அ.தேவராஜ் ஐயா போன்றவர்களை உருவாக்குவது நானே, இறைவனை எப்படி உணர்வது ,எப்படி பூஜைகள் செய்வது என உங்களுக்கு அறிவுரை கூறும் மடாதிபதிகளும் நானே
🔘 நவகிரகங்களில் என்னுடைய காரகங்களில் அதிக அளவில் சுப காரகங்களே உள்ளன.
🔘 தெய்வீக சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும், நானே காரகர். அடிப்படை ஜோதிடமான நாடி ஜோதிடத்தில் என்னை ஜீவ காரகன் என்று முனிவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
🔘 என்னை மஞ்சள் நிறத்திற்கும் காரகர் என கூறுவார்கள் .
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மஞ்சள் துண்டு போடுவதற்கு நானே காரணம்
🔘ஆண், பெண் இருவருக்கும் நான் களத்திர காரகனாக இல்லாவிட்டாலும் கூட நான் பலம் பெற்று இருப்பது (கோட்சாரத்தில்) திருமணம் போன்ற சுபநிகழ்ச்கிகளுக்கு அவசியமான ஒன்று.
🔘உலோகங்களில் மஞ்சள் நிறத்தில் உள்ளதும், விலை உயர்ந்ததுமான ( தனகாரகன்) தங்கத்திற்கு நானே காரகர் ஆகிறேன்.
🔘நான் நேர்மைக்கு காரகர் என்பதால் சட்டம் – ஒழுங்கு, நீதிபதிகள், நீதிமன்றம், நேர்மையான சட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு நானே காரகர் ஆவேன்.
🔘 உடலை பெரியதாக்கும் கொழுப்பு சத்திற்கும் நானே காரகர் ஆவேன்.
🔘பூர்வீகம் ஆச்சாரம்(சுத்தம்), பாரம்பரியம், புரோகிதம், மத நம்பிக்கை, கோவில், சாஸ்திர ஞானம், மந்திர உச்சாடனங்கள், கல்வி நிறுவனங்கள், பருத்த உடல், கருவூலம் (வங்கிகள்), தெய்வங்களில் தட்சிணாமூர்த்தி, விலங்குகளில் மிகப்பெரிய உருவத்தை கொண்ட யானை, ஆலோசனைகளை கூறுபவர்கள் போன்றவை எனது காரகங்களாகும்.
சுக்கிரன் பேசுகிறேன்...
🔘 குருவிற்கு இணையானவன் நான் ,
கிரகங்களில் குரு பேரின்ப காரகன் என்றால், அதற்கு நேர்மாறாக சிற்றின்ப விஷயங்களுக்கு நானே காரகர் ஆவேன்.
🔘 பிறர் மயங்கும் அழகு, அதித கவர்ச்சி, பெண்களுக்கே உரித்தான நளினம், மென்மை, காதல் போன்றவற்றுக்கு நானே காரகர் ஆவேன்.
🔘இரு பாலினத்தில் ஆண்களை விட பெண்களிடத்தில் தான் அழகு, கவர்ச்சி, மென்மை போன்றவை அதிகம் (குறிப்பாக இளம் பெண்களிடத்தில்) என்பதால் நான் இளம் பெண்களை மட்டுமே குறிப்பேன்...
🔘 ஒருவரிடம் உள்ள சொந்த பணத்திற்கும், பொன் பொருட்களுக்கும், கறுப்பு பணத்திற்கும் (பொதுப்பணம் என்றில்லாமல்) நானே காரகர் ஆகின்றார்.
🔘 வெள்ளிக்கு நானே காரகம் . அருசுவைகளில் நம்மை மயக்கும் இனிப்பு சுவைக்கு காரகரும் நானேதான் ஆவேன்.
🔘 நான் பாலின இன்பங்களுக்கு காரகர் என்பதால் ஆண், பெண் உறவுகளின் பொது வெளிப்படும் குழந்தை உற்பத்தியை கொடுக்கும் விந்து விற்கும் நானே காரகம்..
🔘ஆண், பெண் பாலின வேறுபாடுகளை (இனக்கவர்ச்சி) ஒருவருடைய உடலில் உள்ள ஹர்மோன்கள் நிர்ணயிக்கும்.எனவே ஹார்மோன்களுக்கும் நானே காரகர் ஆகின்றேன்..
🔘 மேலும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள், இன்பங்களை நுகருதல், மற்றவர்களை மயக்கும் கலைஞர்கள், ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், சொகுசு மாளிகைகள், இயல், இசை, நாடகங்கள், நடனங்கள், உறவு முறையில் மனைவி, உயர் ரக மதுபான வகைகள், வைரம், தெய்வங்களில் மஹாலட்சுமி போன்றவை என்னுடைய காரகங்களாகும்.
சனி பேசுகிறேன்
🔘 நவகிரகங்களிலேயே தொலைவில் உள்ள கிரகம் நானே ஆவேன் .
🔘 கொடுத்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் கொஞ்சம் காலம் தாமதமாக செய்வதால் என்னை மந்த காரகன் என பெயரிட்டு விட்டனர்.
🔘 எதிர்மறையாக பேசுபவர்கள் , பலவீனத்தை சொல்லுபவர்கள் , உடல் குறைபாடு உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், வயதான தோற்றமாக காட்டிக் கொள்பவர்கள் , இவர்கள் அனைவருக்கும் நானே காரகன்.
🔘 உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தையும் தாமதப்படுத்திக் கொண்டே நான் இருப்பதால் என்னை ஆயுள் காரகன் என்று பெயர் வைத்தனர் சான்றோர்கள்.
🔘 நான் இருட்டு நிறமாகவே இருக்கும். இருட்டு என்பது கரிய நிறம் என்பதால் கரிய நிறத்திற்கு காரகர் நானே..
🔘 அடித்தட்டு மக்கள், மற்றவருக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதற்கு நானே காரகன்.
🔘 என்னை நினைத்தாலே அவர்களை அழுக்கு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் (கருப்பு நிறமும் அழுக்கினைக் குறிக்கும்), மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துபவர்களாகவும், ஆளும் வர்க்கத்தினரை எளிதில் காண முடியாதவர்களாகவும் மாற்றி விடுவேன்.
🔘என்னை வலுவாக பிடித்தவர்களை, கடினமான உழைப்பவர்களாக உருமாற்றம் செய்வேன்.
🔘வேலைகாரர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொழிலை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் எனக்கு தொழில் காரகன் என்றும் பெயர் வைத்தனர்.
🔘 நான் இருக்கும் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ துக்கங்களும், வலி, வேதனைகளும் இருக்கும்.
🔘பிறப்புக்கு குரு என்றால் இறப்பிற்கு நான் காரணம்
🔘 உலோகங்களில் கருப்பு நிறம் கொண்டதும், தொழில்களுக்கு அதிகம் பயன்படுவதுமான இரும்பும் என்னுடைய காரகமே ஆகும்.
🔘 ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கும் நானே காரகன்.
🔘 ஊரே தூங்கும் இரவு வேலையில் பணி புரிவது, பொய், கஞ்சத்தனம், சில்லறை, வறுமை, ஊனம், ஏமாறுதல், ஏக்கம், அமைதியான வீட்டு விலங்குகள், தாழ்ந்த ஜாதி, பக்கவாதம், விடாமுயற்சி, விவேகம், இழப்பு, தத்துவம், தன்நிலை தாழ்தல், நீலக்கல், தெய்வங்களில் ஐய்யனார் போன்ற நீச்ச தெய்வங்கள் போன்றவைகளுக்கும் நானே காரகர் ஆவேன்.
ராகு பேசுகிறேன்
🔘எனக்கென்று தனி வீடு இல்லை ,என்னை நிழல் கிரகமாக மாற்றி விட்டனர்.
🔘 நிழல் கிரகம் என்பதால், கண்ணுக்குப் புலனாகாத ஆவிகளோடு பேசுவேன் ,
பேய், பிசாசுகளோடு விளையாடுவேன்,
மாந்திரீகம் செய்து பிறரை தண்டிப்பேன்.
🔘 ஐந்து தலை பாம்பின் தலை பகுதி நான் ஆதலால் எதையும் பெரிதுபடுத்துவதே எனது காரகம் என முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
🔘 பிரம்மாண்டம் அல்லது விகாரம் என்பது எனது தோற்றமே .
🔘பேய், பிசாசுகள் போன்றவைகள் விகாரமானவைகளாக சித்தரிக்கப்படுகின்றன.
🔘 சனியை போலவே நானும் மலட்டுத்தன்மைக்கு காரணம்
🔘நான் பிரம்மாண்டம் என்பதால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும் கிரக காரகன் ஆவேன்.
எனவே வெளிநாட்டையும், அந்நிய மதங்களையும், அந்நிய மொழிகளையும் பேசுவேன் .
🔘 நிழல் கிரகம் என்பதால் போட்டோ, சினிமா, மின்சாரம் போன்றவற்றிற்கும் நானே காரகன் ஆவேன்
🔘 சிறைச்சாலை, உடலில் உள்ள சுவாசம், அலர்ஜியால் உடலில் ஏற்படும் தடிப்புகள் (விகாரம்), அகன்ற பாத்திரங்கள், வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, எதையும் மிகைப்படுத்தி சித்தரித்தல், மோசடி வித்தைகள், வழக்கத்திற்கு மாறான செய்கைகள் எல்லாம் நான் தான் செய்ய வைப்பேன்.
🔘புற்றுநோய் மூதாதையர்கள், தாத்தா, பாட்டி,
தெய்வங்களில் துர்க்கை, ரத்தினங்களில் கோமேதகம் போன்றவை எனது காரகங்களாகும்.
கேது பேசுகிறேன்...
🔘 ராகுவும் நானும் ஒட்டி பிறந்தவர்கள், ஆதலால் நானும் ஒரு நிழல் கிரகம் ஆகும்.
🔘 ஆனால் நான் அவனைப் போன்று பெரிதாக காட்டிக்கொள்ள மாட்டேன்.
🔘 அடக்கமானவன் எதையும் சிறியதாக்குவது, சிதைப்பது மற்றும் துண்டிப்பது போன்ற காரகங்களை கொண்டுள்ளேன்.
🔘 அவன் பாம்பின் தலைப்போல் பெரியதாக உள்ளவன் நானோ பாம்பின் வாலைப்போல் சிறுமைப்படுத்திக் கொண்டு சிறியதாக உள்ளவன் அதுவே எனது காரகம் ஆகும்.
🔘 என்னை ஞானகாரகன் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள். காரணம் அதிகம் பேசாமல் இருப்பதால் தான்...
🔘 பாம்பு என்பதால் ராகுவைப் போன்று நானும் விஷங்களையும், போதை பொருட்களையும் குறிப்பேன்
🔘 குறிப்பாக போதை பொருட்களில் அபின், கஞ்சா போன்றவை எனது காரகங்களாகும். இது ஒரு வகையில் மோட்சம் எனும் மயக்கத்தை குறிப்பதால் எனக்கு பிடிக்கும்...
🔘 எந்த பொருளையும் உடைப்பது, சிதைப்பது, துண்டிப்பது, அரிப்பது என்பது என்னுடைய காரகம் என்பதால் நாட்டை சீர்குலைப்பவர்களுக்கும், கலக காரர்களுக்கும், மிரட்டல் விடுபவர்களுக்கும், வெடிகுண்டு, பட்டாசு, ஜல்லி, அமிலம் எல்லாவித சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கும், எல்லாவித தடைகளுக்கும் என்னையே குற்றம் சாட்டுகிறார்கள்...
🔘 எனது நிலைமை சில நேரங்களில் ஏழ்மை, மத நம்பிக்கை, தத்துவ ஞானம், மோட்சம், வேதாந்தம், மனோபலத்தை குறிக்கும்.
🔘 பல நேரங்களில் இந்த மனிதர்களை பிடிக்காமல் தனிமையில் இருந்து தவம் செய்து என் ஞானத்தை பெருக்குவேன்.
🔘 நான் எங்கேயாவது அடிப்பட்டு விட்டால் புண்கள், ரணங்களை ஏற்படுத்தும் ...
🔘 உடலில் உள்ள அமிலம், மருத்துவம், மௌன விரதம், பில்லி சூனியம், மாந்திரீகம், ஆவியுலக தொடர்புகளை நானே செய்வேன்.
🔘 மத வெறியனாக இருப்பேன் ஆதலால் பிரிவினை வாதம் ஏற்படும்..
🔘 தனிமை விரும்பி என்பதால் விவாகரத்து ஏற்படும்,
🔘எளிதில் கண்டுபிடிக்க முடியாத போலிகளை உருவாக்குபவன் நான்
🔘 தெய்வங்களில் விநாயகர், நவரத்தினங்களில் வைடூரியம் போன்றவை நானே காரகமாவேன்.